"முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை: 903 பேர் ...
News
"முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை: 903 பேர் கைது!
போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று நடத்தப்பட்ட சோதனைகளில் 903 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனையில், 409 கிராம் ஹெராயின் மற்றும் 2.28 கிலோகிராம் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 14 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், நாடுமுழுவதும் பொலிஸார் மேற்கொண்டு வரும் விசேட நடவடிக்கையில் நேற்று 531 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 246 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 213 பேரும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காக 72 பேரும் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனையில், 409 கிராம் ஹெராயின் மற்றும் 2.28 கிலோகிராம் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 14 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், நாடுமுழுவதும் பொலிஸார் மேற்கொண்டு வரும் விசேட நடவடிக்கையில் நேற்று 531 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 246 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 213 பேரும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காக 72 பேரும் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.