இன்று யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகிறது உலகக் கிண்ணம...
News
இன்று யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகிறது உலகக் கிண்ணம்!
ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ளதுடன், தொடருக்கான கிண்ணம் இன்று (01) யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படுகின்றது.
7.30க்கு தம்புள்ளையிலிருந்து எடுத்து வரப்படும் உலகக் கிண்ணமானது 8.30க்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 10.30 மணிக்கீ வவுனியா நகரத்துக்கு எடுத்துவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 12.00 மணிக்கு கிளிநொச்சியில் வைக்கப்படவுள்ளது.
அதற்கு பிறகு அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையிலும், 4.25க்கு நல்லூர் கந்தன் ஆலயத்திலும் மற்றும் 6.20க்கு துரையப்பா விளையாட்டு அரங்கிலும், 6.40க்கு யாழ்ப்பாணம் கோட்டையிலும், 7.10க்கு யாழ்ப்பாணம் நூலகத்திலும் வைக்கப்பட்டவுள்ளது.
ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரினுடைய ஆட்டங்கள் குறித்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்தோடு உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த தொடரை நடத்தும் நாடு என்னும் அடிப்படையில், இலங்கையில் கடந்த 21.01.2026 திகதி அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உலகக் கிண்ணமானது இலங்கையினுடைய பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படுகின்றமையானது குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்
7.30க்கு தம்புள்ளையிலிருந்து எடுத்து வரப்படும் உலகக் கிண்ணமானது 8.30க்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 10.30 மணிக்கீ வவுனியா நகரத்துக்கு எடுத்துவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 12.00 மணிக்கு கிளிநொச்சியில் வைக்கப்படவுள்ளது.
அதற்கு பிறகு அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையிலும், 4.25க்கு நல்லூர் கந்தன் ஆலயத்திலும் மற்றும் 6.20க்கு துரையப்பா விளையாட்டு அரங்கிலும், 6.40க்கு யாழ்ப்பாணம் கோட்டையிலும், 7.10க்கு யாழ்ப்பாணம் நூலகத்திலும் வைக்கப்பட்டவுள்ளது.
ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரினுடைய ஆட்டங்கள் குறித்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்தோடு உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த தொடரை நடத்தும் நாடு என்னும் அடிப்படையில், இலங்கையில் கடந்த 21.01.2026 திகதி அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உலகக் கிண்ணமானது இலங்கையினுடைய பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படுகின்றமையானது குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்