டெலிகொம் தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திர...
News
டெலிகொம் தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது
நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர், நுவரெலியா பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மேற்கு குளம் வீதி, சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து மாதங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, செப்பு கம்பிகளை திருடியமை தொடர்பாக ஐந்து சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, கேபிள்களில் இருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் செப்பு கம்பிகள், செப்பு அல்லாத 344 அடி நீளமான கம்பிகள், செப்பு கம்பிகளில் இருந்து அகற்றப்பட்ட ரப்பர் உறைகளின் தொகை மற்றும் கம்பிகளை வெட்டுவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த பழனி அப்பன் தங்கராஜ் (40) வயது மற்றும் மற்றவர் ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், தினக்கூலி வேலைக்காக நுவரெலியாவுக்கு வந்து ஹாவாஎலிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என கூறப்படும் ராமநாதன் மாதவன் (30) ஆகிய இருவராவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான இணைப்பு கேபிள்களை வெட்டி, அதிலுள்ள செப்பு கம்பிகளை அகற்றுவது வெறுமனே சொத்துத் திருட்டாக மட்டும் கருதப்படுவதில்லை. இதனால் பொதுமக்களின் தொலைத்தொடர்பு சேவைகள் தடைபடுவதுடன், நிறுவனத்திற்கு நிதி இழப்பும், பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படக்கூடிய நிலை உருவாகும்.
இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ், மற்றொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமான சொத்துக்கு சேதம் ஏற்படுத்தி அதன் பெறுமதி அல்லது பயன்பாட்டைக் குறைப்பது “Mischief” (சொத்து சேதப்படுத்தல்) எனப்படும் குற்றமாக அமையக்கூடும். எனினும், குற்றப்பொறுப்பு தொடர்பான இறுதி முடிவு விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
இச்சம்பவத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் செப்பு கம்பிகள் மற்றும் ஏனைய பொருட்களின் பெறுமதி, அவற்றை வெட்டி அகற்றியதன் மூலம் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட செப்பு மற்றும் செப்பு அல்லாத கம்பிகளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. அவற்றை நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக சமர்ப்பித்த பின்னர், அவற்றின் பெறுமதியை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (01) சந்தன பஸ்நாயக்க மற்றும் நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமிந்த சஞ்ஜீவ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்துநில் பிரேமலால் தலைமையில், பொலிஸ் சார்ஜன்ட்கள் 46031 சுரவீர, 8093 தென்னகோன், 33176 ஹேரத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி 89967 தேவதாஸ் ஆகிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (24) நுவரெலியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மஜிஸ்திரேட் புத்திகா தர்மதாஸ உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா மேற்கு குளம் வீதி, சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து மாதங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, செப்பு கம்பிகளை திருடியமை தொடர்பாக ஐந்து சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, கேபிள்களில் இருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் செப்பு கம்பிகள், செப்பு அல்லாத 344 அடி நீளமான கம்பிகள், செப்பு கம்பிகளில் இருந்து அகற்றப்பட்ட ரப்பர் உறைகளின் தொகை மற்றும் கம்பிகளை வெட்டுவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த பழனி அப்பன் தங்கராஜ் (40) வயது மற்றும் மற்றவர் ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், தினக்கூலி வேலைக்காக நுவரெலியாவுக்கு வந்து ஹாவாஎலிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என கூறப்படும் ராமநாதன் மாதவன் (30) ஆகிய இருவராவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான இணைப்பு கேபிள்களை வெட்டி, அதிலுள்ள செப்பு கம்பிகளை அகற்றுவது வெறுமனே சொத்துத் திருட்டாக மட்டும் கருதப்படுவதில்லை. இதனால் பொதுமக்களின் தொலைத்தொடர்பு சேவைகள் தடைபடுவதுடன், நிறுவனத்திற்கு நிதி இழப்பும், பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படக்கூடிய நிலை உருவாகும்.
இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ், மற்றொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமான சொத்துக்கு சேதம் ஏற்படுத்தி அதன் பெறுமதி அல்லது பயன்பாட்டைக் குறைப்பது “Mischief” (சொத்து சேதப்படுத்தல்) எனப்படும் குற்றமாக அமையக்கூடும். எனினும், குற்றப்பொறுப்பு தொடர்பான இறுதி முடிவு விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
இச்சம்பவத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் செப்பு கம்பிகள் மற்றும் ஏனைய பொருட்களின் பெறுமதி, அவற்றை வெட்டி அகற்றியதன் மூலம் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட செப்பு மற்றும் செப்பு அல்லாத கம்பிகளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. அவற்றை நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக சமர்ப்பித்த பின்னர், அவற்றின் பெறுமதியை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (01) சந்தன பஸ்நாயக்க மற்றும் நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் சாமிந்த சஞ்ஜீவ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்துநில் பிரேமலால் தலைமையில், பொலிஸ் சார்ஜன்ட்கள் 46031 சுரவீர, 8093 தென்னகோன், 33176 ஹேரத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி 89967 தேவதாஸ் ஆகிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (24) நுவரெலியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மஜிஸ்திரேட் புத்திகா தர்மதாஸ உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.