New Updates! Fresh news just arrived.

22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு மனுக்கள்! - ...

News

22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு மனுக்கள்!

August 28, 2026 6:04 pm
22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு மனுக்கள்!
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு இடைக்கால மனுக்களானது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு மனு சிஹல உருமயவினுடைய தலைவர் சரத் மனமேந்திரவாலும், மற்றைய மனு ஓய்வுபெற்றோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேரா வினாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த மனுக்களில் 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தினை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now