New Updates! Fresh news just arrived.

இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்!

News

இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்!

May 14, 2026 5:47 pm
இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்!
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த இரு சந்தேகநபர்களும் ஹெரோயின் போதைப்பொருள், சிகரெட், லைட்டர்கள் மற்றும் புகையிலை துண்டுகளினை வைத்திருப்பதற்கு இவர்கள் இடமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தாள்கள் மற்றும் குழாய் வடிவில் சுருட்டப்பட்ட பணத்தாள்கள் ஆகியவற்றைச் சிறைக்கூண்டிற்குள் வைத்திருக்கவும் இவர்கள் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் குறித்த சிறைக்கூண்டுகளைச் சோதனையிட்டபோது, இந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now