New Updates! Fresh news just arrived.

ஈரான் நகரங்கள் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ள அமெர...

News

ஈரான் நகரங்கள் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ள அமெரிக்கா!

July 13, 2026 10:15 am
ஈரான் நகரங்கள் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ள அமெரிக்கா!
ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குறித்த குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ தாக்குதல்களினை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவினுடைய பாதுகாப்பு அமைச்சகத்தினுடைய ஒரு பிரிவான இராணுவ அதிரடி படையான சென்ட்காம் வெளியிட்டுள்ள செய்தியில், ஹேர்மூஸ் நீரிணையை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களினுடைய போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களினை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவான தாக்குதல்களினை அமெரிக்க படை தொடங்கியுள்ளது.

ஈரானிய படைகளினுடைய திறனை குறைக்கும் வகையில், பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் குறித்த தாக்குதல் நடத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களிலும் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானுக்கு எதிராக நேற்றைய முன்தினம் 3-வது சுற்று தாக்குதல்களினை அமெரிக்கா நடத்தி முடித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றினை தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக குறித்த தாக்குதலானது நடந்துள்ளது.

இதன்படி, ஈரானின் 140 இராணுவ இலக்குகளின் மீது துல்லிய தாக்குதல் நடந்தது. நிலம் மற்றும் கடல்வழி போர் விமானம், டிரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உதவியோடு,குறித்த தாக்குதல் நடந்துள்ளது என அமெரிக்காவினுடைய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

குறித்த சூழலில், நேற்று மற்றொரு தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை திறந்தே உள்ளது. அதற்கேற்ப தாக்குதல் நடத்தியவர்களினை நேற்றிரவு நாங்கள் விரட்டியடித்து விட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் நாட்டுக்கு எதிரான அமெரிக்காவினுடைய தாக்குதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதற்கு ஈரானை அமெரிக்காவினை குற்றம் சாட்டியுள்ளது. .

குறித்த நீரிணை வழியின் ஊடாக செல்லும் அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்துள்ள கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும் எனவும் அப்படி இல்லையெனில், குறித்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படமாட்டாது என தெரிவித்தது. இது உலக நாடுகளினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால், ஆத்திரமுற்ற அமெரிக்க அதிபர் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரத்து செய்யப்படுகின்றது என அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றமானது அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்பட்ட சூழலில், மேற்காசிய பகுதியில் தன்னுடைய தலையீட்டை நிறுத்தி கொள்ளும் வரை ஹோர்மூஸ் நீரிணை பகுதி மூடப்படுகின்றது என ஈரான் திடீரென்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now