New Updates! Fresh news just arrived.

ஐந்து மாதங்களின் பின் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அ...

News

ஐந்து மாதங்களின் பின் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

June 16, 2026 6:31 pm
ஐந்து மாதங்களின் பின் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (16) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது

குறித்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் யாழ் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜீவன் தலைமையில் இடம்பெற்றது

இந்த அபிவிருத்தி குழு கூட்டமானது கடந்த ஜனவரி மாதம் (02) ஆம் திகதி இடம்பெற்றதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்பு இடம்பெற்றது என குறிப்பிடத்தக்கது

குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களினுடைய பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now