New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழல்: ஐக...

News

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழல்: ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கை!

March 3, 2026 9:05 am
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழல்: ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையினை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 148 ட்ரோன்களை இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானிய தாக்குதல் விரிவானதில், 174 பாலிஸ்டிக் ஏவுகணைகள் நாட்டை நோக்கிச் வருவதினை கண்டறியப்பட்டதாகவும் அவற்றில் 161 அழிக்கப்பட்டதாகவும், 13 கடலில் விழுந்ததாகவும் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. .

689 ட்ரோன்களைக் கண்டறிந்ததாகவும், 645 இடைமறிக்கப்பட்டதாகவும், 44 நாட்டின் எல்லைக்குள் தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதலாக, எட்டு குரூஸ் ஏவுகணைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இடைமறிப்புகளால் பல பொதுமக்கள் சொத்துக்களுக்கு சிறிய மற்றும் மிதமான பொருள் சேதம் ஏற்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளதுடான், மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 68 பேர் சிறிய காயங்களுக்கு ஆளானார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட ஒலிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாலும், போர் விமானங்கள் ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்ததாலும் ஏற்பட்டதாக அதில் மேலும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், தாக்குதல்கள் நடந்த இடங்கள் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. ஈரான் மற்றும் நேச நாட்டுப் படைகளுக்கு இடையேயான தொடர்ச்சியான பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்த நிலையில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது,
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now