New Updates! Fresh news just arrived.

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட...

News

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

July 12, 2026 12:44 pm
பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் ஊடாக நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கும் என்றும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து மீனவர்களும் கடற்சார் சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now