நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு: பொலி...
News
நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு: பொலிஸார் பாதுகாப்பு!
மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6:20 மணியளவில், நாகர்கோவில் கிழக்கு வனப்பகுதியில் உள்ள பனை மரமொன்றின் அடியில் இந்த கையெறி குண்டு இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார், குண்டு இருக்கும் பகுதியை அடையாளப்படுத்தி, அதன் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பான அறிக்கை நாளை (09.06.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூ.லின்ரன்
இன்று மாலை 6:20 மணியளவில், நாகர்கோவில் கிழக்கு வனப்பகுதியில் உள்ள பனை மரமொன்றின் அடியில் இந்த கையெறி குண்டு இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார், குண்டு இருக்கும் பகுதியை அடையாளப்படுத்தி, அதன் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பான அறிக்கை நாளை (09.06.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூ.லின்ரன்