லஹுகல தேசியப் பூங்காவில் நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்க...
News
லஹுகல தேசியப் பூங்காவில் நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை!
அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த ஏரிப் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட யானை ஒன்றுக்கு நேற்று (30) முதல் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இந்த யானை சுமார் 7 அடி உயரமும், 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானை இருக்கும் இடத்திலேயே தற்காலிகக் கூடாரம் அமைத்து தங்கியுள்ள லஹுகல தேசியப் பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், அதற்குத் தேவையான உணவு மற்றும் நீரை வழங்கி வருவதுடன், அதன் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து மருத்துவச் சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றனர்.
இலங்கையின் காடுகளுக்குள் மனித-யானை மோதல்களால் காயமடையும் யானைகள் குறித்த செய்திகள் உலகளவில் கவனம் பெற்று வரும் நிலையில், இந்த மீட்பு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பாறுக் ஷிஹான்
பாதிக்கப்பட்ட இந்த யானை சுமார் 7 அடி உயரமும், 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானை இருக்கும் இடத்திலேயே தற்காலிகக் கூடாரம் அமைத்து தங்கியுள்ள லஹுகல தேசியப் பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், அதற்குத் தேவையான உணவு மற்றும் நீரை வழங்கி வருவதுடன், அதன் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து மருத்துவச் சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றனர்.
இலங்கையின் காடுகளுக்குள் மனித-யானை மோதல்களால் காயமடையும் யானைகள் குறித்த செய்திகள் உலகளவில் கவனம் பெற்று வரும் நிலையில், இந்த மீட்பு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பாறுக் ஷிஹான்