தற்போதுள்ள எரிபொருள் வரிசையே இன்றும் தொடரும் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் ஆர்டர்கள் குறைவடைந்தமையே இந்த நிலைக்கு காரணம் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சதநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்ததோடு, கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பினாலும், கிராமப்புறங்களில் நிலைமையை மீட்டெடுக்க இன்னும் ஒரு நாள் ஆகும் எனவும் இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர்.