எஹெலியகொட பன்னில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக .பன்னில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இறந்தவரின் உறவினர்கள் சூப் தானசாலை வழங்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, இறந்தவர் அந்த இடத்திற்கு வந்து தனது பணப்பையில் இருந்த பணம் காணவில்லை என்று கூறியபோது அந்த இடத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் இதன்போது குறித்த இடத்தில் இருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய விசாரணையில் இறந்தவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளதுடன் கொலையை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளததாகவும் அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.