இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பதவியை செல்லுபடியாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர், இது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.