பிலிப்பைன்ஸில் இன்று (15) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக தலைநகர் மணிலாவில் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பின் அதிர்வுகளும் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதோடு இந்த நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் நீடித்ததாகவும், சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.