நாடளாவிய ரீதியில் சில பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அளவுகோல்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே இது தொடர்பான வெற்றிடங்கள் காணப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் கூட ஸ்தம்பிதமடைந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும்தெரிவித்துள்ளார்.