QR குறியீட்டின்படி எரிபொருள் சலுகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, விலை சூத்திரத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளதுள்ளதோடு ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் 15 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், லங்கா ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் புதிய விலை 318 ரூபாவாகும்.
மேலும், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய அந்த டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபாவாகும்இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.