பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் தற்போதைக்கு எந்த ஒரு கட்சிக்கும் 50% வாக்காளர்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற 2023/2024 தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலுக்காக அல்ல மாறாக பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் தேர்தல் மற்றும் அரசியலில் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.