இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துக்கு சிக்னல் பிழையே காரணம் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விபத்துக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 275 ஆகவும், காயமடைந்தவர்களினுடைய எண்ணிக்கை 1175 பேர்கல் எனவும் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 793 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதுடன் விபத்து இடம்பெற்ற இடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (03) பார்வையிட்டதுடன், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.