தியலும நீர்வீழ்ச்சியின் உடடியலும பகுதியில் இரவு முகாமில் இருந்த யுவதியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியமையினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி குறித்த இளைஞரை எதிர்வருகின்ற 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.