இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று (10) ஆரம்பமானது.
இதன்படி, இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தில் ஈர்க்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட்து.
அத்தோடு, இக்குழுவினருக்கு பயிர்ச்செய்கைக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உபகரணங்களையும் விநியோகித்த அமைச்சர், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து விவசாயத் திட்டங்களும் இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.