தொரட்டியவ இந்துல்கொட கந்த பிரதேசத்தில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகநபர் வைத்திருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்துல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.