வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 8 லட்சத்து 20,000 ரூபாய் மோசடி செய்த வழக்கில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ரம்புக்கனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 06 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, ரம்புக்கன, பெலிகொடபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தம்பதியரே கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணையில், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் பல நபர்களை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவிகேக்கின்றனர்.
மேலும், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களுக்கு எதிராக 46 பேர் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாகவும்
இன்று இருவரும் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.