பொதுமக்கள் இலகுவாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இணையத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிரதேச செயலக அலுவலகங்களுடன் இணைந்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் உப அலுவலகங்களில் தமது கைரேகைகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த புதிய ஏற்பாட்டின் கீழ், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் மூன்று நாட்களுக்குள் கொரியர் சேவை மூலமாக உரிய நபர்களிடம் வீட்டிற்கு அனுப்பப்படும் எனவும் வழங்கப்படும் எனவும் செய்யப்படும், அதன் பிறகு பாஸ்போர்ட் அவர்களின் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர், தேவைப்பட்டால், குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு வந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையும் வழமை போன்று இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளளார்.