2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதன்படி, பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெறும் எனவும் இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜூலை 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு ஆன்லைனில் நுழைவு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்பட மாட்டாது எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.