பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா ஆகியோர் இன்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதன்படி, அவர் 2 நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கையின் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வதக்கவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று இரவு நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதோடு நாட்டில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் இரு நாடுகளின் பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து விவாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றதோடு பிரான்ஸ் அதிபர் ஒருவர் இலங்கைக்கு வருகைதருவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.