
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து திணைக்களத்திற்கு சொந்தமான பேருந்து லொறியொன்றுடன் மோதுண்டத்தில் குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தொம்பே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதோடு விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
கல்கமுவ டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து திணைக்களத்திற்கு சொந்தமான பேருந்து கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது துல்ஹிரிய தபால் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.