
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.
இதன்படி, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார விநியோகத்திற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று அறிவித்துளளது.
அத்தோடு, இலங்கை மின்சார சபையினுடைய பொது முகாமையாளரினால் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சென்ற மாதம் 21 ஆம் திகதியன்று முன்வைத்திருந்த யோசனையில், மின்சாரக் கட்டணத்தினை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமத்து கோரப்பட்துருக்கின்றது.
மேலும், மின்சார கட்டணத்தில் 15 வீதத்தினால் குறைப்பதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது 20 நாட்கள் மாத்திரம் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் கட்டணத்தினை அதிகரிப்பதற்காக அனுமதியானது கோரப்பட்டுள்ளமையானது அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.