ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்களை ஒழிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அவர்களின் தலைமையில் குறித்த குழுவின் செயற்பாடுகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.