
மாத்தறை சிறைச்சாலையினுடைய சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தொலைபேசி ஊடாக நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் கொலை மிரட்டல் விடுத்து, மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது உறவினர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என குறித்த நபர் அதிகாரியிடம் கூறியுள்ளார்.
அத்தோடு, குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரியிடம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது உறவினர் விரும்பியவாறு சிறைச்சாலையில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறும் உறவினர்களுக்கு இடையூறு செய்தால் எதிர்காலத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னதாக, சிறைச்சாலையின் அறையில் பல மொபைல் போன்களை அதிகாரிகள் கண்டுபிடித்த்துள்ளதுடன் ஒரு குறிப்பிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, அந்த அதிகாரியை காலி சிறைச்சாலையில் இணைக்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், குறித்த உத்தியோகத்தர் கடமை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, வெலிகம பேருந்து நிலையத்தில் அவர் பயணித்த பேருந்தில் ஏறிய சிலர், அதிகாரியைத் தாக்கி சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களில் மாத்தறை சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு மாத்தறை சிறைச்சாலையின் அதிகாரிகளுக்கு எதிராக செயற்பட்ட நான்கு கைதிகளை அந்த சிறைச்சாலையில் வைத்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசரச் சோதனையின் போது அறைகளில் இருந்து 15 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.