பிரான்ஸின் அரசாங்கத்தால் நடத்தப்படும் பாடசாலைககளில் மாணவர்கள் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா ஆடையை அணிய தடை விதிக்கப்படும் என அந்நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய கல்வியாண்டு செப்டம்பர் 4ஆம் திகதி தொடங்கும் போதே இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது
அத்தோடு, மதச்சார்பற்ற சட்டங்களை மீறுவதாகக் கூறி, பிரான்சில் உள்ள பொதுப் பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்களில் மதச் சின்னங்கள் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, பிரான்ஸ் பாடசாலைகளில் அபாயா அணிவது தொடர்பில் பல மாதங்களாக இடம்பெற்ற விவாதத்தின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டில், பிரான்ஸ் பொது இடங்களில் முழு முகத்தை மறைக்கும் முக்காடு அணிவதைத் தடை செய்ததுடன் இது பிரான்சின் ஐந்து மில்லியன் முஸ்லிம் சமூகத்தினரிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
மேலும், 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, பாடசாலைகளில் மத சின்னங்கள் இருப்பதை பிரான்ஸ் கடுமையாக தடை செய்துள்ளது.