இந்நாட்டில் உள்ள ஐம்பது வீதமான மக்கள் சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நாளாந்தம் ஒரு ரூபாவையாவது பங்களிப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்புகளே தற்போது அதிக நிதியுதவி பெறும் அமைப்புகளாக இருப்பதாகவும் குறித்த விடையம் தொடர்பில் அவர் மேற்கொண்ட ஆய்வின் பின்னரே இந்த உண்மை தெரியவந்ததாகவும் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் நிதியினால் நடத்தப்படுவதக்கவும் டெய்லி மிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேகமாக பேட்டியில் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், குறித்த அமைப்புக்கள் சேகரிக்கும் பணத்தை உள்ளூர் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்ந்து வழங்குவது நாட்டுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் காவல்துறையின் முயற்சிகள் புலிகளாலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினராலும் முறியடிக்கப்படுவதால், இது காவல்துறையினரால் கூட விசாரிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால்தான் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் உத்தேச சட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு உள்ளதுடன் இது விடுதலைப் புலிகளின் போருக்குப் பின்னர் நாடு எதிர்கொண்ட விளைவு, மக்களைக் கொன்று எந்தப் போரையும் தோற்கடிக்க முடியாது. விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்.யாரேனும் அவருக்கு வாய்ப்பளித்தல் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவதாகவும் குறித்த டெய்லி மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.