பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் தொடர்வதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, “தற்போதைய நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோயானது பரவி வருவருவதாகவும் இதன் அறிகுறிகளாக கண்கள் சிவத்தல், பார்வை மங்கல், கண்ணீர், காய்ச்சல், தலைவலி போன்வற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாகவும் இது மிக விரைவாக பரவும் என்பதினால் இதை வைரஸ் காய்ச்சலாக பார்ப்பதாகவும் குழந்தைகள் நல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதால், அவர்களுக்கு இடையே தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் குறித்த அறிகுறிகளுடன், சில நேரங்களில் மேல் சுவாசக் குழாயில் இருமல் “சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் வரலாம் என்றும் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான நிலை இருந்தால், குழந்தையை பாடசாலைக்கோ அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கோ, முன்பள்ளிக்கோ அனுப்பாதீர்கள் எனவும் அவ்வாறு அனுப்பினால் மற்ற குழந்தைகளுக்கும் குறித்த தொற்று ஏற்படலாம்.” என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.