ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு கடுமையான கோவிட் -19 நிலைமைகளைத் தளர்த்திய பிறகு, சீனாவில் மருத்துவமனைகள் மீண்டும் குழந்தைகளால் நிரம்பியுள்ளன.
இதன்படி, பெய்ஜிங் மற்றும் வடக்கு சீனாவில் உள்ள மருத்துவமனைகள் முதல் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நூற்றுக்கணக்கான நோயாளிகள் வடக்கு சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள சில குழந்தைகள் மருத்துவமனைகளில் வரிசையில் நிற்பதாகவும் சீனாவின் தியான்ஜினில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையின் வெளிநோயாளர் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று (25) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெய்ஜிங் மற்றும் வட சீனாவின் பிற முக்கிய நகரங்களில் உள்ள சுகாதார அதிகாரிகள், காய்ச்சல் மற்றும் சுவாச வைரஸ் (RSV), அத்துடன் மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் அடிக்கடி பதிவாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.