ஏ.எஸ்.எம் அர்ஹாம்
கல்முனை வலய கல்விப் பணிப்பாளரின் தலைமையில் கல்முனை வலய மாணவர் பாராளுமன்றம் அமர்வு இன்று (29) அல்-ஹிலால் வித்தியாலயத்தின் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
இதில் கல்முனை வலயத்திற்கு உட்பட 40 பாடசாலைகள் கலந்து கொண்ட நிலையில் மாணவர்களுக்கு இடையில் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மாணவ பாரளுமன்ற உறுப்பினர்களும் வலய கல்விப் அதிகாரிகளும் ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதுடன், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்கள் கல்முனை வலய மாணவ பாராளுமன்றத்தின் பொதுச்செயலராகவும் தலைமை வகித்தார்.
மேலும், இந்நிகழ்விற்கு தலைமை வகித்த கல்முனை வலய கல்விப் பணிப்பாளரின் உரையினைத் தொடர்ந்து மாணவ பாரளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வும் அதனை தொடர்ந்து மாணவ பாரளுமன்ற சபாநாயகரின் உரையும் மாணவ பாரளுமன்ற 10 அமைச்சர்களின் உரையும் இடம்பெற்றது.