பல்வேறு மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு டிசம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.