தெற்கு பிலிப்பைன்ஸ் தீவான மின்டானோவில் சனிக்கிழமையன்று 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை வெளியடபட்டுள்ளது.
இதன்படி, இரவு 10.37 மணியளவில் 32 கிலோமீட்டர் (20 மைல்) ஆழத்தில் குறித்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அளவு மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் தெற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என்று எதிர்வு கூறியுள்ளது.
ஆதாரம்: Associated Press
-Agencies