குற்றவியல் சட்டத் திருத்தத்தின் (19வது அதிகார சபை) அபராதத் தொகையை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, தற்போதைய நிதி மதிப்புடன் ஒப்பிடுகையில், குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்குமாறு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.