தெஹிவளையில் உள்ள பதினொரு மாடி கட்டிடத்தில் இன்று புதன்கிழமை (06) காலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தெஹிவளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு மீட்கப்பட்டது.
மேலும், இலக்கம் 124 அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள குறித்த கட்டிடம் கைவிடப்பட்ட நிர்மாணத் தளமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.