பாறுக் ஷிஹான்
மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் நிலையில் சி.சி.டி.வி கமராவின் வன்பொருள் மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், மத்ரஸாமாணவனினுடைய மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம இன்று அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, சி.சி.டி.வி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் எனவும் பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன் குறித்த மத்ரஸா மாணவனினுடைய மரணமானத்தினை கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மேலும், மாணவனினுடைய மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரினால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸாவினுடைய நிர்வாகியாகியான மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக குறித்த நிர்வாகியாகியான மௌலவியினை ஆஜரபடுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.