ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்னாள் ஜனாதிபதியின் பெயரை முன்மொழிந்தார், பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதனை உறுதிப்படுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2வது தேசிய மாநாடு இன்று (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது.