கேரளாவில் கொரோன வைரஸின் திரிவான BA.2.86-ன் புதிய துணை வகையான JN.1 வைரஸினுடைய பாதிப்பானது கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, கேரளாவில் 78 வயதான மூதாட்டியிடம் நவம்பர் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையின் முடிவில், அவருக்கு குறித்த புதிய துணை JN.1 பாதிப்பானது இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவருக்கு லோசன காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது எனவும் தற்போது அவர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் நிபுணர்கள் விவரித்துள்ளனர்.
இதேவேளை, திருச்சியில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற தமிழருக்கும் JN.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதென்றலும் திருச்சியிலோ அல்லது தமிழகத்திலோ வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை.எனவும் இந்தியாவில் வேறு எங்கும் JN.1 வைரஸினுடைய பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல்வேறு ஆய்வக அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவில் காணப்படுகின்ற புதிய வகை கோவிட் 19 திரிபுகளைக் கண்காணித்து வரும் ‘இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம்’ (INSACOG) நிறுவனம், கேரளாவில் தற்போது பரவும் கொரோனா
வைரஸ் குறித்தும், அதனுடைய பாதிப்புகள் குறித்தும் கண்காணித்து வருகின்றதுடன் குறிப்பிட்ட அமைப்பினுடைய தலைவர் என்.கே அரோரா தெரிவிக்கையில் “இந்த புதிய வகை திரிபானது நவம்பர் மாதத்தினுல் கண்டறியப்பட்டதோடு இது BA.2.86 திரிபினுடைய துணை வகைதான் எனவும் இந்த JN.1 சப்-வேரியன்ட் வைரஸானது இந்தியாவில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வருன்றதுடன் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றதோடு தற்போதைய கண்காணிப்பினுடைய முடிவின் பாடிய இந்த வகை வைரஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கோ, தீவிரமான பாதிப்புகளோ இந்தியாவில் உருவாகவில்லை” என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அரசு சார்பில் 78 இடங்களிலும், தனியார் சார்பில் 253 இடங்களிலும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையம் உள்ளதாகவும் கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையினை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அந்த வகையில், கடந்த 14ஆம் திகதி 264 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது பரவும் தொற்று, எந்த வகையான கொரோன உருமாற்றம் என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருவருவதாகவும் தெரிவித்தார்.
ஆதாரம் – தி இந்து