2023 கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்குத் தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சையை இலக்காகக் கொண்டு டியூஷன் வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்துவது டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதோடு 2023 கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை 04 ஜனவரி 2024 இல் ஆரம்பமாகி 31 ஜனவரி 2024 வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்டப் படிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) முடிவடைகின்றது.
மேலும், அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் படசாலைகளினதும் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் பெப்ரவரி 02, 2024 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.