காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய நோய் நிலை பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சிறைச்சாலையில் நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 கைதிகள் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் கவலைக்கிடமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்நிலையில் குறித்த கைதி உயிரிழந்துள்ளதாகவும் அவர் கடந்த 30ஆம் திகதி கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தற்போது இரண்டு கைதிகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் சிறைச்சாலையில் நோய் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.