வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்களை ஏமாற்றி ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் உடுநுவர உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர்,கைது செய்யப்பட்ட்தாக பேராதனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தொழில் தருவதாக கூறி 03 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது உண்மைகள் தெரியவந்துள்ளதுடன் பேராதனை பொலிஸாருக்கு மட்டும் கிடைத்த 08 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.