துபாய் தரங்க என அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குற்றவாளியுடன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ) அதிகாரிகளினால் குருநாகலில் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 18 ஆம் திகதி எம்பிலிபிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 55 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தா நிலையில் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 39 வயதுடைய சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான துபாய் தரங்கவின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் மாவத்தகம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துபாய் தரங்காவின் போதைப்பொருள் வலையமைப்பிற்கான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முன்னணி நபர்களில் இவரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.