டிசம்பர் 09 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய மின்வெட்டுக்கான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்தை இலங்கை மின்சார சபை வன்மையாக மறுத்துள்ளது.
குறித்த அறிக்கை தவறானது என்று நிராகரித்த இலங்கை மின்சார சபை இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளதுடன் “விசாரணைகளின் முடிவிற்குப் பிறகு இது தொடர்பான அறிக்கைகளை வெளியிட முடியும்” என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மேற்கோள்காட்டி இன்று அதிகாலை மின்சாரத் துறை ஒழுங்குபடுத்தலின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மிக அண்மைய மின்சாரத் தடைக்கு தாம் தவறு செய்ததாக அரசுக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனம் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இரண்டு குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன, அதாவது இலங்கை மிசார சபையின் கூடுதல் பொது மேலாளர் தலைமையில் உள்ளக விசாரணைக் குழு மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட வெளி விசாரணைக் குழு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்வெட்டுக்கான முக்கிய காரணங்களை ஆய்வு செய்தல், இச்சம்பவம் தொடர்பாக இலங்கை மிசார சபையினுடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடைப்பிடித்த நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தோல்விகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு உள்ளகக் குழு கடமைப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட வெளிக்குழு, சம்பவத்தின் தோற்றம், தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து விசாரணை நடத்துதல், தடைபட்ட மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட காலக்கெடுவை ஆய்வு செய்தல் மற்றும் பரிந்துரைகள் மற்றும் நடவடிக்கைகளை வழங்குதல் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது பாதுகாத்தல் தொடர்பான விடையங்களை ஆராய்வதாக தெரிவித்தார்.