தட்டம்மை உலகளாவிய தொற்றுநோயாக பரவும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயோயல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். தட்டம்மை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கடந்த மே மாதத்திலிருந்து 700 இற்கும் மேற்பட்டோர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களில் 42 சதவீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தட்டம்மை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளை இலக்காக கொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை சுகாதார மேம்பாட்டு பணியகம் பரிந்துரைத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை போன்ற அதிக ஆபத்துல்லா மாவட்டங்களில் இந்த அவசரநிலை வலியுறுத்தப்படுகிறது.
மேலும், அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த ஆபத்து அதிகருத்துள்ள பிரதேசங்களில் தட்டம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியினை வலுப்படுத்துவதினை நோக்கமாகக் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதியிலிருந்து 6 தொடக்கம் 9 மாதங்களுக்கு இடைப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி முதல் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்துவதனை உறுதிப்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது.