போதைப்பொருள் கடத்தல்காரரான மட்டக்குளியைச் சேர்ந்த “குடு ரொஷான்” என்பவருக்குச் சொந்தமான பல சட்டவிரோத சொத்துக்களை புலனாய்வு பிரிவினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
இதன்படி, ஜா-அல பிரதேசத்தில் 55 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான காணி, வீடு மற்றும் கார் என்பன சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், “குடு ரொஷான்” (27) வரக்காபொல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.