மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் சந்திரசேகரன் புரட்சி தலைவர் மாத்திரமின்றி மலையகத்திற்கு மாத்திரமல்ல நாட்டிற்கு மாத்திரமல்ல சர்வதேச ரீதியில் ஒரு தனித்துவமான தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அமரர் சந்திரசேகரன் என ஜக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.01.01.2024.திங்கள் கிழமை அமரர் சந்திரசேகரணின் 14வது சீரார்த்த தான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் மறைந்த தலைவர் விட்டுசென்ற அரசியலை தொடர்வதற்கு தனித்துவமான சிந்தனை உள்ளவர்களுக்கு மாத்திரமே அது முடியும்.தலைவனின் மறைவிற்கு பிறகு அவர் முன்னெடுத்த வேளைத்திட்டங்கள் இல்லாமல் போயிருக்கிறது.ஆனாலும் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நிலையி்ல் நாங்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் கெளரவ ஜனாதிபதி அவர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள்சம்பளமாக1700ருபாவாக வழங்கப்பட வேண்டுமென பெருந்தோட்ட நிருவனங்களுக்கு பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். இதுவரையிலும் எந்த ஒரு நிருவணமும் அந்த தொகையினை வழங்க முடியாதுயென அறிவிக்கவில்லை .
கடந்த முறை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையின் ஊராக சம்பளத்தை அதிகரித்தோம் பெருந்தோட்ட நிருவணங்கள் எமது கோரிக்கையினை உதாசினம் செய்தால் மீண்டும் சம்பள நிர்னய சபையின் ஊடக சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
கூட்டு ஒப்பந்ததில் உள்ள தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை முதலாளிமார் சம்மேளனம் செவிசாய்க்க வேண்டும்.தொழிற்சங்கங்கள் மக்களுக்கு வேண்டாத எந்த ஒரு கோரிக்கையினையும் முன்வைக்கவில்லை தொழிற்சங்கங்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை முதலாளிமார் சம்மேளனம் நிறைவேற்றப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.